
கலைஞர்களால் பாராட்டப்பட்டு இருக்கிறது. படப்பிடிப்புக்கு குறித்த நேரத்தில் வரும் நேரம்தவறாமை போன்ற அவரது இயல்பு சங்கர் போன்ற ஆகச்சிறந்த கலைஞர்களால் கூட பாராட்டப்பெற்றது.கலைஞானி கமல்ஹாசன் ஒரு தொழில்நுட்பக்கலைஞரின் மகனாக திரைப்படத் தொழில் பற்றி நன்றாகப் புரிந்து நடந்து கொள்பவர் என விஜய்யை பாராட்டினார். நிறைய புது இயக்குனர்களுக்கு வாய்ப்பு கொடுத்த ஒரு நடிகனாக மட்டுமில்லாமல் பட தயாரிப்பாளருக்கு கூட சம்பள விஷயத்தில் கறார் பேர்வழியாக விஜய் இருந்தது இல்லை. கத்தி படத்தில் கூட தன்னுடைய சம்பளத்தை சில விஷயங்களுக்காக சமரசம் செய்து கொண்டார். புலி படத்துக்காக தொடர்ந்து 200 நாட்கள் எந்த இன்னலையும் பொருட்படுத்தாமல் நடித்துக் கொடுத்துள்ளார் (காட்டில் படப்பிடிப்பு நடந்த போது அவரது மென்மையான அணுகுமுறை, தொழில் மீது அவர் கொண்டிருக்கும் மரியாதை, சிரத்தை & காயங்களைக் கூட பொருட்படுத்தாமல் படப்பிடிப்பு தடையின்றி நடைபெற கொடுத்த ஒத்துழைப்பு என நிறைய விஷயங்கள் பாராட்டுதலுக்குரியது என அந்த பட இயக்குனர் சிம்புதேவன் கூட கூறியுள்ளார்). இன்றைய தேதியில் ஒரு படம் தொடங்கி அது வெளியிடும் வரை பல இன்னல்கள்.அதைப் பொறுத்தே பல குடும்பங்களின் வாழ்வாதாரம் அமைந்துள்ளது. அந்த வகையில் தன் கடின உழைப்பு மற்றும் தொழில் பக்தியால் பல குடும்பங்கள் வாழ நேரடியாகவும், மறைமுகமாகவும் உதவும் இளையதளபதி மரியாதைக்கும், பாராட்டுக்கும் உரியவரே...
0 comments:
Post a Comment